Monday, April 23, 2012

முதல் காதல்


பனிக்கால
காலை நேரச் சிலிர்ப்பாய்
பட்டென்று நாசி தழுவும்
வாசனையாய்
தொலைதுர பேருந்து பயணத்தின்
அடிவயிற்று கனமாய்
சொல்லிக் கொள்ளாமல்
கலையும்
மயான உறவுகளாய்
கூவாவிட்டாலும்
பிரமை தட்டும்
பக்கத்து மில்லின் சங்கொலியாய்
எண்ணிக்கொண்டிருக்கும் போதே
கணக்குத் தவறும்
கூட்ஸ் வண்டி பெட்டிகளாய்

இன்னும்
விளக்கத் தெரியாமலே
உள்ளோடிக் கொண்டிருக்கிறது
பகிரப்படாத
அந்த முதல் காதல்


காத்திரு....


முயற்சி செய்


Sunday, March 18, 2012

life to love



I trust you


is a better compliment than

I love you....

because -

you may not always

trust the person you love,

but you can always love the

person you trust...


Thursday, March 8, 2012

hhmmmm...


அவன் தன் காதலிக்கு ஒரு போட்டி வைத்தான்.

ஒரு நாள் முழுவதும் உன்னால் என்னுடன் பேசாமல் இருக்க முடியுமா..

போனில் பேசக்கூடாது.. எஸ்எம்எஸ் அனுப்பக்கூடாது...

இதில் நீ வெற்றி பெற்றுவிட்டால்

காலமெல்லாம் உன்னை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன்.

அவள் ஏற்றுக்கொண்டாள்.

அந்த நாள் முழுவதும் அவள் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை.

பாவம், அவளுக்குத் தெரியாது..

சில மணி நேரங்களில் அவன் இறந்துவிடப்போகிறான் என்பது.

காரணம், அவனுக்கு புற்று நோய்.

மறுநாள் காலை அவன் அறைக்கு அவள் சென்றாள்.

சவப்பெட்டியில் அவன் உடல் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அதிர்ந்து போனாள்.

அருகில் இருந்த மேஜையில் அவளுக்கு ஒரு கடிதம் காத்திருந்தது.

அதில்,

கண்ணே... நீ வெற்றி பெற்று விட்டாய்..

காலமெல்லாம் இப்படியே இருந்து விடு.

விடைபெறுகிறேன்

என்று எழுதியிருந்தது.

what a scene..

அதனால்....



நல்லது.
உன் தேடல் மறைக்கப்படுவது..

நல்லது
உன் ஆசைகள் நிதானிப்பது...

நல்லது
உன் கனவுகள் வீணாவது...

நல்லது
உன் ஏக்கம் பொய்களில் கரைந்து போவது

நல்லது
பீறிட்டெழும் உன் உணர்வுகள் அடக்கப்படுவது

நல்லது
காதலை காமமாக எண்ணி ஒடுங்கிப்போவது

நல்லது
தொலைக்க விரும்பினாலும் தொடர்வது

நல்லது
தேடக்கூடாது என்ற கவலையோடு தேடுவது

நல்லது
இடைவெளிக்குள் இதம் காண்பது

நல்லது
வெளிச்சத்தில் இருட்டை ரசிப்பது

நல்லது
வெளிப்படுத்துவதைவிட ஒளிக்கத் தடுமாறுவது

நல்லதுதான்
நாலு பேருக்காக
சவமாகவே வாழ்ந்து பழகுவதும் கூட.

சிரிப்பதில் வழியும்
கவ்லையும்....
வார்த்தைகளில் மறையும்
ஏக்கமும்....


தேட வைக்கும் பாவங்கள்.
அதையா செய்யச் சொல்கிறாய்..

Wednesday, January 11, 2012

நம்பிக்கை

அது ஒரு உண்மை கண்டறியும நாற்காலி.
அதில் அமர்பவர் உண்மையைப் பேசினால் பச்சை விளக்கு எரியும்.
பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும்.

அவன் அமர்கிறான்.
காதலி கேட்கிறாள்...

நீ என்னைக் காதலிக்கிறாயா..

அவன் கூறுகிறான்
ஆமாம் ( சிவப்பு விளக்கு எரிகிறது )

கவலைப்படாதே.. கடவுள் ஏதாவது தவறு செய்திருக்கலாம்.
மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்.என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

நீ என்னைக் காதலிக்கிறாயா...

மறுபடியும் கேட்கிறாள்.

அவனது பதில்..
ஆமாம் ( இப்போது பச்சை விளக்கு எரிகிறது )

என்ன நடந்தது தெரியுமா..
முதலில் அவள் கேட்டபோது அவன் மனதில் காதல் இல்லை
அதனால் சிவப்பு விளக்கு எரிந்தது.

ஆனால் இரண்டாவது முறை அவள் கேட்டபோது
தன் காதலன் மீதான நம்பிக்கையை அவள் வெளிப்படுத்தினாள்.
அப்போது அவன் மனதில் உண்மையாகவே காதல் துளிர்த்தது.

அதனால்தான் பச்சை விளக்கு எரிந்தது.
இதுதான் காதல்.


(படித்ததில் பிடித்தது)

Tuesday, January 10, 2012

புரிதல்


அவன் அவளை ஒரு விருந்து மண்டபத்தில் சந்தித்தான்.
மிகவும் அழகாக இருந்தாள்.
அங்கிருந்த பல இளைஞர்கள் அவளையே கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், அவன் மிக அமைதியாக ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தான்.
அவனை யாரும் சட்டை செய்யவில்லை.

விருந்து முடியும் நேரம்.
அவன் அவளிடம் சென்றறான்.
இருவரும் சேர்ந்து தேநீர் அருந்தலாமா என்று கேட்டான்..
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டாள்.

இருவரும் ஒரு தேநீர் விடுதிக்குச் சென்றனர்.
தேநீர் வந்தது. எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கனத்த அமைதி. நிமிடங்கள் மௌனமாக நகர்ந்தன.
அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது.
வீட்டுக்கு புறப்படலாமா...
அவள் கேட்டாள்.

சட்டென்று அவன் தேநீர் விடுதி பணியாளரை அழைத்தான்.
சிறிது உப்பு கிடைக்குமா...
காபியில் கலந்து குடிக்கத் தேவைப்படுகிறது..


பக்கத்து மேஜைகளில் அமர்ந்திருந்தவர்கள் திடுககிட்டுப் போனார்கள்.
காப்பியோடு உப்பா... அவர்கள் கண்களில் குழப்பமும் அதிர்ச்சியும் இருந்தது.

அவனுக்கும் முகம் சிவந்தது.
அமைதியாக பணியாளர் கொடுத்த உப்பை காபியில் கலந்து குடிக்கத் துவங்கினான்.

அவள் குழப்பத்துடன் கேட்டாள்.
இந்தப்பழக்கம் எப்போது முதல் உனக்கு உள்ளது...

அவன் சொன்னான்.
நான் சிறுவனாக இருந்த போது கடற்கரையோரத்தில் குடியிருந்தேன்.
எனக்கு கடலில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அப்போது கடலில்
‘உள்ள உப்புநீரை ரசித்துக்குடிப்பேன். இந்த உப்புக்காப்பி போல.
நான் எப்போதெல்லாம் இப்படி உப்பைக் கலந்து குடிக்கிறேனோ
அப்போதெல்லாம் எனது சிறுவயது நினைவுகள் வந்துவிடும்
என் சொந்தஊர் ஞாபகங்கள் என்னைச் சுற்றும்.
இப்போதும் அங்கு என் பெற்றோர் உள்ளனர்.
அவர்களைப் பிரிந்து இருப்பது எனக்கு வேதனையளிக்கிறது...

அவன் கண்களில் ஈரம்.

அவளுக்கும் மனம் கனத்தது.
வீட்டைப்பிரிந்து வாழ்வதற்காக வருத்தப்படும்
அவனை நினைத்து நெகிழ்ந்து போனாள்.
இவனைப்போல வீட்டை நேசிப்பவர்கள்,
வீட்டில் உள்ளவர்களையும் குடும்பத்தையும் நேசிப்பவ்ர்கள்,
நிச்சயம் பொறுப்பானவர்கள்.
உறவுகளை பாதுகாக்கும் அக்கறை கொண்டவர்கள் என்று எண்ணிக்கொண்டாள்.

தொலைவில் உள்ள தனது சொந்த ஊர் அனுபவங்களை அவளும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள். சிறுவயது அனுபவங்கள், குடும்ப உறுப்பினர்கள் வரை அவளது பேச்சு நீண்டது.

இருவருக்கும் இடையில் மெல்லிய நட்பு பூக்கத் தொடங்கியது.
இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.
இத்தனை மனிதாபிமானமிக்க ஒருவனை, அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு மனிதனைத்தான் அவள் தன் வாழ்க்கைத் துணையாக தேடிக்கொண்டிருந்தாள்.
இந்த நட்பு கிடைத்ததற்காக உப்புக் காப்பிக்கு அவள் நன்றி கூறிக்கொண்டாள்.

பிறகு அவர்கள் நட்பும் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
நீண்டகாலம் இருவரும் மனமொத்த தம்பதிகளாக
அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
எப்போதெல்லாம் காபி தயாரிக்கிறாளோ, அப்போதெல்லாம் தனியாக ஒரு கோப்பையில் உப்பு கலந்து அவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தாள்
அவன் விரும்புவான் என்பதற்காக.

நாற்பது வருடங்கள் உருண்டோடியது.
ஒருநாள் அவன் இறந்து போனான்.
அப்போது அவளுக்காக அவன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான்.

“அன்பே. என்னை மன்னித்து விடு...
வாழ்நாள் முழுவதும் பொய்கூறியதற்காக என்னை மன்னித்துவிடு...
ஆனால் இந்த ஒரு பொய்யை மட்டுமே,
நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன்..
உனக்கு நினைவிருக்கிறதா.. நாம் முதன் முதலாக சந்தித்தபோது நான் அருந்திய உப்புக் காபி...
அப்போது... உன்னுடன் அமர்ந்த அந்த நிமிடங்களில்... நான் தடுமாறிப் போயிருந்தேன்...
உண்மையில் நான் எனது காபிக்கு சர்க்கரைதான் கேட்க நினைத்தேன்..
ஆனால் வாய் குழறி உப்பை கேட்டுவிட்டேன்..
அதை மாற்றிக் கேட்க நினைத்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.
அதையே குடித்துவிட்டேன்.
நிச்சயம் அந்த உப்புக்காப்பியால் நமக்குள் உறவு உருவாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்று பல சமயங்களில் நான் நினைத்திருக்கிறேன்.
ஆனால், எதற்காகவும் பொய் சொல்லமாட்டேன் என்று உன்னிடம் நான் சத்தியம் செய்திருந்ததால் பேசாமல் இருந்துவிடுவேன்.

இப்போது நான் இல்லை. இனியும் உன்னிடம் மறைக்க விரும்பவில்லை..
உண்மையை சொல்கிறேன்..
எனக்கு உப்புக்காப்பியே பிடிக்காது. அப்பப்பா... என்ன ஒரு மோசமான சுவை..
என்னால் குடிக்கவே முடிந்ததில்லை..

ஆனால், அதை என் வாழ்நாள் முழுவதும் குடித்தேன்.. உன்னை சந்தித்த நாள் முதல் நான் எதற்காகவும் மனம் வருந்தியதில்லை. என்னை அத்தனை மகிழ்ச்சியாக வைத்திருந்தாய்.. உன்னுடம் வாழ்ந்த நாட்கள் அத்தனை அற்புதமானவை.

மீண்டும் ஒரு பிறவி இருந்தால், நிச்சயம் உன்னுடனேயே வாழ ஆசைப்படுகிறேன்.. என் வாழ்நாளை உனக்காகவே அர்ப்பணிக்க விரும்புகிறேன்... மீண்டும் அந்த உப்புக்காப்பியைக் குடிக்க வேண்டியிருந்தாலும்... ”

கடிதத்தை படித்து முடித்த போது அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.

சிலதினங்கள் கழித்து அவளிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

உப்புக்காப்பியின் சுவை என்ன...

அவள் கூறினாள்...
.

இனிப்பு..“




காதல் என்பது மன்னித்தல்.
காதல் என்பது புரிந்துகொள்ளுதல்.,
காதல் என்பது கவனித்தல்.
காதல் என்பது கையைப் பற்றிக்கொள்ளுதல்

Sunday, January 8, 2012

உரிமை

காதல்

நிமிடங்கள்

வலி நிச்சயம்

நிழல்

காதலாய்...

ப்ச்ச்...

குரல்

ரசனை

ரயிலடி கவிதைகள்


ஒரு முன்நிசி பொழுதில்

ஆளரவமற்ற
ரயில் நிலைய
கிரானைட் பெஞ்சின்
குளிர்ச்சியில்

நிரம்பி வழிகின்றன
உன்னைப் பற்றியே
ஊற்றெடுக்கும்
நினைவுகள்

=

கடகடவென
இழுத்துச் செல்லப்படும்
சுமைப் பெட்டி

கடந்த பின்னும்
மிச்சமிருக்கும
கூடிக்குறைந்த
இரைச்சல்

பிரிந்த பின்னும்
பேசிக்கொண்டேயிருக்கும்
நாம்

=

பிளாட்பாரம் நெடுகிலும்
வரிசையாக
கண்ணில் தெறிக்கும்
சிவப்பு விளக்கொளியில்
மின்னிக்கொண்டிருக்கின்றன

பத்திரமாக
போகச்சொல்லி
நீ எச்சரித்த வார்த்தைகள்..

=

நேரம் ஓடவில்லை
என்றாலும்
கனக்கவில்லை பொழுது...

பீறிட்டுச் சிதறிய
உன்னைப் பற்றிய நினைவில்
கொசுக்களின் ரீங்காரமும்
இசைதான்

=

மௌனம் பூசிக்கிடக்கும்
இந்த
ரயிலடி இருளின்
தனிமையில்
காதில்
மெல்லக்கேட்கிறது

உன் கிசுகிசுப்பான
அன்பு

=

ஒலி பெருக்கி
அறிவிப்புடன்
சேர்த்து ஒலிக்கிறது

நிலையத்தின் உள்ளே
வரும் ரயிலின் தடதடப்பு

நீ
பேசியபடி
பார்ப்பாயே அப்படி.

=

ஊதலும் கொடியசைப்பும்
முடித்து

தரையை
விலக்கி
மெல்ல நகரும்
ரயிலின் வேகத்தில்

இருளையும் மீறி
முகத்தில் அறைகிறது
சில்லென்ற காற்று

நம் பிரியத்தைப் போல்.

தழும்பு

இன்னும்
நினைத்துக் கொண்டிருப்பது
சாத்தியமில்லைதான்

அழும் குழந்தைக்கு
பால் கொடுக்க


அடுப்பெரிக்க

அவரைக் கவனிக்க

அவசர அவசரமாய்
அலுவலகம் புறப்பட

என
நொடிமுள்ளாய்
துடித்துக் கொண்டிருக்கும்
நேரங்களில்
போன கதை
ஞாபகம் வராதுதான்..

முற்றுப்புள்ளிக்கு
அடுத்துதான்
அடுத்த வாக்கியமே
என்று சொன்ன
தமிழாசிரியர் வார்த்தை

அன்று புரிந்ததில்லை
இன்று புரிகிறது

உனக்குத் தெரிந்ததை
நீ எழுது

எனக்குத் தெரிந்த
கவிதையை
நான் எழுதுகிறேன்