Thursday, March 8, 2012

அதனால்....



நல்லது.
உன் தேடல் மறைக்கப்படுவது..

நல்லது
உன் ஆசைகள் நிதானிப்பது...

நல்லது
உன் கனவுகள் வீணாவது...

நல்லது
உன் ஏக்கம் பொய்களில் கரைந்து போவது

நல்லது
பீறிட்டெழும் உன் உணர்வுகள் அடக்கப்படுவது

நல்லது
காதலை காமமாக எண்ணி ஒடுங்கிப்போவது

நல்லது
தொலைக்க விரும்பினாலும் தொடர்வது

நல்லது
தேடக்கூடாது என்ற கவலையோடு தேடுவது

நல்லது
இடைவெளிக்குள் இதம் காண்பது

நல்லது
வெளிச்சத்தில் இருட்டை ரசிப்பது

நல்லது
வெளிப்படுத்துவதைவிட ஒளிக்கத் தடுமாறுவது

நல்லதுதான்
நாலு பேருக்காக
சவமாகவே வாழ்ந்து பழகுவதும் கூட.

சிரிப்பதில் வழியும்
கவ்லையும்....
வார்த்தைகளில் மறையும்
ஏக்கமும்....


தேட வைக்கும் பாவங்கள்.
அதையா செய்யச் சொல்கிறாய்..

No comments:

Post a Comment