
அவன் தன் காதலிக்கு ஒரு போட்டி வைத்தான்.
ஒரு நாள் முழுவதும் உன்னால் என்னுடன் பேசாமல் இருக்க முடியுமா..
போனில் பேசக்கூடாது.. எஸ்எம்எஸ் அனுப்பக்கூடாது...
இதில் நீ வெற்றி பெற்றுவிட்டால்
காலமெல்லாம் உன்னை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன்.
அவள் ஏற்றுக்கொண்டாள்.
அந்த நாள் முழுவதும் அவள் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை.
பாவம், அவளுக்குத் தெரியாது..
சில மணி நேரங்களில் அவன் இறந்துவிடப்போகிறான் என்பது.
காரணம், அவனுக்கு புற்று நோய்.
மறுநாள் காலை அவன் அறைக்கு அவள் சென்றாள்.
சவப்பெட்டியில் அவன் உடல் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
அதிர்ந்து போனாள்.
அருகில் இருந்த மேஜையில் அவளுக்கு ஒரு கடிதம் காத்திருந்தது.
அதில்,
கண்ணே... நீ வெற்றி பெற்று விட்டாய்..
காலமெல்லாம் இப்படியே இருந்து விடு.
விடைபெறுகிறேன்
என்று எழுதியிருந்தது.
No comments:
Post a Comment