Sunday, January 8, 2012

தழும்பு

இன்னும்
நினைத்துக் கொண்டிருப்பது
சாத்தியமில்லைதான்

அழும் குழந்தைக்கு
பால் கொடுக்க


அடுப்பெரிக்க

அவரைக் கவனிக்க

அவசர அவசரமாய்
அலுவலகம் புறப்பட

என
நொடிமுள்ளாய்
துடித்துக் கொண்டிருக்கும்
நேரங்களில்
போன கதை
ஞாபகம் வராதுதான்..

முற்றுப்புள்ளிக்கு
அடுத்துதான்
அடுத்த வாக்கியமே
என்று சொன்ன
தமிழாசிரியர் வார்த்தை

அன்று புரிந்ததில்லை
இன்று புரிகிறது

உனக்குத் தெரிந்ததை
நீ எழுது

எனக்குத் தெரிந்த
கவிதையை
நான் எழுதுகிறேன்

No comments:

Post a Comment